Pages

Sunday 5 November 2017

எது ஆத்திகம்? எது நாத்திகம்?



ஆத்திகம் நாத்திகம் இரண்டுக்கும் உள்ள அர்த்தம் சரியாக புரிந்து கொள்ளப் படவில்லை. அன்று இந்தியாவை பொறுத்தவரை 1) வேதங்களை ஏற்றுக் கொள்பவர்களும், 2) ஈஸ்வரனையோ அல்லது விஷ்ணுவையோ ஏற்றுக் கொள்பவர்களும், 3) ஆத்மா இருப்பதை ஏற்றுக் கொள்பவர்களும் ஆத்திகர்கள் ஏன்று அழைக்க பட்டனர். இந்த மூன்றையும் ஏற்று கொள்ளாதவர்களை நாத்திகர் என்று அழைக்க பட்டனர். அதிலும் குறிப்பாக வேதங்களை நம்பாதவர்கள் நாத்திகர் என்றனர்.

வேதங்களை கடைபிடிக்காத பிற தத்துவங்களை, நம்பிக்கைகளை நாத்திகம் என்றே சொல்லப் பட்டது. புத்த, ஜைன, சார்வாக (saarvaga) மற்றும் அஜிவிக்க (ajivikka) தத்துவங்கள் நாத்திகமாக கருதப்பட்டன. புத்தர் வேதங்களை ஏற்றுக் கொள்ளாததால் புத்த மதத்தினர் நாத்திகர்களாக அழைக்கப்பட்டனர்.

புத்த மதம் நாத்திகமாக கருதப் பட்ட அதே நேரத்தில் கௌதம புத்தர் விஷ்ணுவின் அவதாரமாக சில இந்து வழிமுறைகளில் சொல்லப் பட்டு இருக்கிறது.

இன்னொருபுறம், இந்திய தத்துவ அடிப்படையில் நியாய (neyaya), வைசேசிக (vaisesiga), சம்க்ய (samkhya), யோக (yoga), மைமாம்ச (mimamsa), மற்றும் வேதாந்தா (vedhantha) என்று ஆறு பிரிவுகளாக ஆத்திகம் கற்கப் பட்டது.

முன்பு, ஆத்திகம் என்றால் தீஸம் (theism), நாத்திகம் என்றால் அதீஸம் (atheism) என்று சொல்லப்படவில்லை. ஆனால் இன்றைய காலத்தில் அது போல புரிந்து கொள்ள படுகிறது. ஆனால் இது சரியான அர்த்தம் அல்ல. உதாரணத்துக்கு சம்க்கிய தத்துவம் ஆத்திகத்திலும் நாத்திகத்திலும் சேர்க்கப் பட்டு இருந்தது.

குறைந்தது ஒரு தெய்வம் உள்ளது என்று ஆத்திகம் (தீஸம்) நம்புகிறது.

வரலாறுக்கு முந்தய காலத்தில், நாகரீகம் உருவாகாத காலத்தில் விலங்குகள் வழிபாடு, மூதாதயர் வழிபாடு, இயற்கையை வணங்குவது போன்ற வழக்கம் இருந்தது. இந்த உருவகங்கள் உண்மையில் இருப்பதால் நம்புவதற்க்கும், வணங்குவதற்கும் ஆதாரம் தேவைப் படாமல் இருந்தது.

ஒரு தீஸ்ட் (theist), எப்படி கடவுள் நம்பிக்கை கொள்கிறார், ஏன் இந்த நம்பிக்கை, எவ்வளவு உறுதியாக உள்ளார் என்பது போன்ற காரணங்கள் தேவை இல்லை. கடவுள் நம்பிக்கை எப்படி வந்தது என்று விளக்கத்தை தீஸம் எதிர் பார்க்கவில்லை. கடவுளை நம்புவது ஒன்றே தீஸத்தின் அடிப்படை. அதற்கு மேல் ஆராய்ந்து பார்க்க வழிகளை பெரும்பாலும் வைப்பது இல்லை.

கடவுள் நம்பிக்கை அனைத்தும் ஒரே மாதிரி இல்லை. வேறு வேறு காலங்களில் வேறு வேறு கடவுள்கள், அது போல ஒரே காலத்தில் வேறு வேறு கடவுள்கள்.

தீஸ்ட் (theist) -ல் ஒரு பிரிவு கடவுள் அனைத்தையும் படைத்து அவரே நிர்வகிக்கிறார் என்று நம்புகின்றனர். அதே நேரத்தில் தெய்வீக வெளிப்பாடுகளை நம்புவது இல்லை.

ஒரு டெயிஸ்ட் (deist) கடவுள் அனைத்தையும் படைத்தார், ஆனால்  அவரே நிர்வகிக்கிறார் என்பதை ஏற்றுக் கொள்வது இல்லை. கடவுள்  அனைத்தையும் படைத்து சில மாற்ற முடியாத விதிகளை அமைத்து படைத்தவர் தேவை படாமலே இயங்கும் படி செய்திருக்கிறார் என்றும் நம்புகின்றனர்.

ஓரு அதீஸ்ட் (atheist), கடவுள் என்பதையே நம்புவதில்லை. அவரே அனைத்தையும் நிர்வகிக்கிறார் என்பதையே நம்புவதில்லை.

யதார்த்தவாதிகள், கடவுள் இருப்பதை நம்புகிற சரியான ஆதாரங்கள் தற்சமயம் இல்லை என்று நம்புகிறார்கள். யதார்த்தவாதி தீஸ்ட் ஆகவும் அதீஸ்ட் ஆக இருக்க முடியும்.

யதார்த்தவாதி-தீஸ்ட்கடவுள் இருப்பதை நம்புவர் ஆனால் நிரூபிக்க சரியான ஆதாரங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றனர். ”யதார்த்தவாதி-அதீஸ்ட்கடவுள் இல்லை என்பதை நம்புவர் ஆனால்,  கடவுள் இல்லை என்று முடிவு செய்ய ஆதாரங்கள் இல்லை என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

ஒரே ஒரு கடவுளை நம்புவது மோனோதீஸம் (monotheism).  பல கடவுள்களை நம்புவது பாலிதீஸம் (polytheism), கடவுள் அகிலம் முழுவது இருக்கிறார், கடவுளும் அகிலமும் ஒன்று என்று நம்புவது பான்தீஸம் (pantheism).

ஒரே ஒரு கடவுளை மட்டும் வணங்க வேண்டும், மற்ற கடவுள்கள் வணங்குவதற்கு உரியது அல்ல என்பது ஒரு சாரார் நம்பிக்கை. நிறைய கடவுள்களை நம்பினாலும் ஒரே ஒரு கடவுளை மட்டும் வாழ் நாள் முழுக்க வணங்குவது மற்றொரு சாரார் நம்பிக்கை. அல்லது காலத்திற்கேற்ப வேறு வேறு கடவுளை வணங்குவது சிலரின் நம்பிக்கைகள்.

ரூப, அரூப, இயற்கையான, அமானுஷ்யமான தெய்வ நம்பிக்கைகளை ஏற்றுக் கொள்ளாதவர்கள் நாத்திகர்கள் என்பது பொதுவான கருத்து. ஒரு சமயம் அல்லது பிரிவு மற்ற பிரிவை நாத்திகம் என்று சொல்லப்பட்டதும் உண்டு. நம்பிக்கை வேறு பட்டவர்களையும் நாத்திகராக கருதப் பட்டனர்.

பூமத்திய ஆப்ரிக்காவிலும் தென்கிழக்கு ஆசியா பகுதிகளில் வசிக்கும் உயரம் குறைந்த சில பழங்குடி இன மக்கள் எந்தவித சடங்கு முறைகளும் இல்லாமல் இருக்கின்றனர் என்று வில் டுரன்ட் (Will Durant) (Durant's Our Oriental Heritage) குறிப்பிட்டு உள்ளார். அவர்களிடையே கடவுள், தேவதைகள், ஆவிகள் என்ற எந்த நம்பிக்கையும் இல்லை.  அவர்கள் இறந்தவர்களை எந்த சடங்கும் இல்லாமல், எந்த பூஜையும் இல்லாமல் புதைக்கின்றனர். எந்த ஒரு சிறு மூட நம்பிக்கைகள் கூட அவர்களிடம் இல்லை.

தீஸம், பல்வேறு விதமான மத நம்பிக்கைகளை உள்ளடக்கி உருவாகியது. ஆனால், மத நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்வது  ஓரே ஒரு கடவுளையாவது நம்ப வேண்டும் என்பதே. ஒரு கடவுளை மட்டும் நம்பி பிற கடவுள்களை நம்பாதவர்களும் ஒரு வகையில் அதீஸ்ட் ஆகும். அதே நேரத்தில், ஒரு கடவுளை மட்டும் நம்பியது அனைத்து கடவுள்களையும் மறுப்பதாக ரோமானியர்கள் கருதினர். அது மட்டுமன்றி, அவர்களை நாத்திகர்களாக நம்பினர்.

கிருஸ்துவர்கள் ஒரே ஒரு கடவுளை நம்புவது மிக வித்தியாசமாகவும், ஏற்றுக் கொள்ள முடியாததாலும் இருந்ததால் ரோமானியர்களால் கிட்டத்தட்ட முன்னூறு ஆண்டுகளாக பல கிருஸ்துவர்கள் கொல்லப்பட்டனர்.

நாத்திகர்களும், வேறு மதத்தை சார்ந்தவர்களும், உலகம் முழுவதும் துன்புறுத்தப் படுகின்றனர். பங்களாதேஷ், எகிப்து, இந்தோனேஷியா, குவைத், பாகிஸ்தான் மற்றும் ஜோர்டான் நாடுகளில் நாத்திகம் பேச அனுமதி இல்லை. வேறு மதங்களும் வளர முடியவில்லை. ஆப்கானிஸ்தான், ஈரான், மாலத்தீவுகள், பாகிஸ்தான், சவூதி அரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் நாத்திகர்கள் மரண தண்டணை அடையும் சூழ் நிலை உள்ளது. இன்னும் சில நாடுகளில் வேறு மதங்களை பின் பற்ற அனுமதிப்பதில்லை.

ஆத்திகம், நாத்திகம் இரண்டும் ஒருவருடைய நம்பிக்கை சார்ந்த விஷயம். ஆனால், எது, ஆத்திகம் எது நாத்திகம் என்று தெளிவாக தெரியாமலும், தான் தன் கடவுளை, தன் நம்பிக்கைகளை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும், கடை பிடிக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பது, வலியுறுத்துவது சரித்திரம் முழுவதும், காணப்படுகிறது.

ஆத்திகம், நாத்திகம் பற்றிய தெளிவான ஞானம் பெரும்பாலான பிரச்சனைகள் எழாமல் இருக்க உதவி செய்யும்.

Sunday 5 June 2016

யுத்தம் - ஏன்? எதற்கு?

ஒரு அரசர் நிறைய நாடுகளை பிடித்தால் அவரை பேரரசர், சாம்ராட், சுல்தான் என்று அழைப்பது நாம் செய்த மிகப் பெரிய தவறு. தன்னுடைய சாம்ராஜ்யத்தை பெருக்கிக் கொள்ள மற்ற நாடுகளோடு சண்டை போட்டு அந்த நாடுகளை தன் கீழ் கொண்டு வருவது பாராட்டக்கூடிய செயல் அல்ல. மனித குலம் தனக்கு தானே அழித்துக் கொள்ள நடந்து வரும் கொடுமை.

எந்த யுத்தமும் மனிதாபிமானத்தோடு (?) நடந்ததில்லை, நடப்பதில்லை. மனிதனுடைய உச்ச கட்ட கொடூரத்தை, கொலை வெறியை அங்கு பார்க்கலாம். எதற்காக? தன்னுடைய நாட்டை விரிவாக்கி ஆளுவதனால் மக்களுக்கு என்ன நன்மை?. தன்னை சரித்திரம் மாவீரன் என்று அழைக்க அரசர்களுக்கு ஏற்பட்ட ஆசையும், யுத்த வெறியும் நாடு பிடிக்கும் கொடுமையாக இருக்கிறது. ஒவ்வொரு யுத்தத்திலும் தன்னுடைய வீரர்களை பலி கொடுத்து எதிரி (?) நாட்டு வீரர்களையும் கொன்று பெறும் வெற்றியால் என்ன கிடைக்க போகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் சாவதைத் தவிர வேறென்ன? ஒரு அரசர் சிறிய நாட்டை ஆளுவதற்கும் பெரிய நாட்டை ஆளுவதற்கும் சரித்திரத்தில் என்ன மாற்றம் நடக்கப் போகிறது. நாடுகள் பிடிக்கப் பட்டு ஒன்றாக சேர்க்கப் பட்டு சில காலத்தில் துண்டு துண்டாக உடைந்து போன சரித்திரம் ஏராளம். இடையில் எத்தனை மரணம், எத்தனை அழிவு.




தம்மை காத்துக் கொள்ள ஒரு நாடு போரிடுவது வேறு, நாட்டை விரிவு படுத்த போரிடுவது வேறு. எதிரி நம்மை தாக்க வரும் போது நம்மை காப்பாற்றிக் கொள்ள போரிட்டுதான் ஆக வேண்டும். திறமையான படை அமைப்பும், நல்ல போர் திறமையும், ஆயுத பலமும் ஒரு நாட்டுக்கு நிச்சயம் தேவை. தம்மை காத்துக் கொள்ளவே தவிர மற்ற நாடுகளை பிடிக்க அல்ல.




தன்னுடைய சாம்ராஜ்ஜியத்தை பெரிதாக்க நடத்தப் படும் போர்களை எந்த வகையில் நியாயப் படுத்த முடியும். ஒரு அரசனுடைய சிறப்பு தன்னுடைய ஆட்சி காலத்தில் நல்ல ஆட்சி கொடுப்பதுதான். நாடு எவ்வளவு பெரியது என்பது அல்ல. சிறு சிறு நாடுகளாக இருந்தால் என்ன தவறு?. மக்கள் நன்றாக வாழ வேண்டுமே தவிர எத்தனை போர்கள், எவ்வளவு அழிவு, எல்லை எவ்வளவு பெரியதானது என்று பார்க்கும் கொடுமையை பெருமையாக பல யுகங்களாக செய்து வருகிறோம்.
 
அலக்ஸாண்டர் தி க்ரேட் (Alexander the great), சரித்திரத்தில் தோல்வியே பார்க்காத மாபெரும் வீரனாக, யுத்த மேதையாக இன்று வரை போற்றப் படுகிறார். அவர் ஒரு மாவீரர் என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இருக்க முடியாது. ஆனால் நாணயத்தின் மறுபக்கத்தை பார்க்கும் போது அவருடைய 10 வருட போரினால் அழிந்தவர்கள் ஏராளம், ஏராளம். நாசமான நகரங்கள் ஏராளம். மாசிடோனியா முதல் வட இந்தியா வரை தன் ஆட்சிக்குள் கொண்டு வந்தார்

போரின் போது அலக்ஸாண்டர் தீப்ஸ் (Thebes) நகரை தரை மட்டமாக்கினார். டைரே (Tyre) - வை வெற்றி கொண்டு அங்கு இருந்த போரிடக் கூடிய ஆண்கள் அனைவரும் படுகொலை செய்யப் பட்டனர். பெண்களும், சிறுவர்களும் அடிமைகளாக விற்கப் பட்டனர். பெர்சிபொலிஸ் நுழைந்ததும் அவருடைய படை வீரர்களை சூறையாட அனுமதித்தார். இந்த சூறையாடல் நிறைய நாட்களுக்கு நடந்தது

அலக்ஸாண்டர் தன்னுடைய 20 வயது முதல் 32 வயது வரை போரிட்டுக் கொண்டே இருந்தார். 32 வயதில் திடீரென்று அலக்ஸாண்டர் இறந்ததால் அவருடைய சாம்ராஜ்ஜியம் உடைய ஆரம்பித்தது. வாரிசு சண்டையினால் சுமார் 40 வருடம் தொடர்ந்து யுத்தம் நடந்து கொண்டே இருந்தது. அதன் பின் 4 பெரிய பிரிவுகளாக உடைந்தது. அதற்கு அப்புறம் வேறு வேறு நாடுகளாக உருவாயின.




சரித்திரம் போற்றும் மற்றொரு மாவீரன் நெப்போலியன் போனபார்ட் (Napoleon Bonaparte). இவரின் தொடர் யுத்தங்களினால் கிட்டத்தட்ட எழுபது லட்சம் பேர் கொல்லப் பட்டனர். 

சிரியாவின் முக்கிய வியாபார இடமான ஜாஃபா (Jaffa)-வை நெப்போலியன் வெற்றி கொண்டபோது அவரின் கடும் கோபத்தினால் ஜாஃபாவில் உள்ள அனைவரும் கொடுமையாக கொல்லப் பட்டனர். அவருடைய அனுமதியின் பேரில் இரவு பகலாக கொலைகளும், பெண் கொடுமைகளும் நடத்தப் பட்டன. 

ரஷ்யா உடன் போரோடினோ (Borodino) போரில் 44,000 ரஷ்யாவின் வீரர்களும் 35,000 ஃப்ரெஞ்சு வீரர்களும் பலமான காயங்கள் பட்டோ சிறை பிடிக்கப் பட்டோ மற்றும் கொல்லப் பட்டனர். அன்றைய சரித்திரத்தில் இந்த போர் ஒரு பெரிய ரத்த களமான போராக இருந்தது. 

ஃப்ரெஞ்சு படையினர் 4 லட்சம் பேர் ரஷ்யாவின் உடன் போரில் இறங்கினர். ஆனால் யுத்தம் முடியும் தறுவாயில் 40,000 பேர் மட்டுமே உயிரோடு பெரிசினா ஆற்றை (Berezina River) கடந்தனர்.  ரஷ்யர்களின் தரப்பில் 1,50,000 வீரர்களும், பல்லாயிரக் கணக்கான பொது மக்களும் இறந்தனர். கிட்டத்தட்ட 12 வருடங்கள் யுத்தங்களில் வெற்றியை பெற்ற நெப்போலியன் ரஷ்ய யுத்தத்தில் தோற்று கைது செய்யப் பட்டார்.

செங்கிஸ்கான் (Genghis Khan) ஒரு மாபெரும் தலைவராக, வீரராக சொல்லப் படுகிறார். அவருடைய தொடர் யுத்தத்தால் சுமார் 4 கோடி மக்கள் கொல்லப் பட்டனர். உலக மக்கள் தொகையில் சுமார் 11% அழிக்கப் பட்டனர். 

மங்கோலியர்கள் சாமர்கண்ட் (Samarkand)- ஐ வெற்றி கொண்டதும் செங்கிஸ்கானை எதிர்த்து போரிட்ட அனைத்து போர் வீரர்களும் கொல்லப் பட்டனர். அங்கிருந்த மக்களை ஊருக்கு வெளியே ஒன்றாக வரவழைத்து அனைவரும் கொல்லப் பட்டனர். வெட்டப் பட்ட தலைகள் மலை போல் குவிந்து செங்கிஸ்கானின் வெற்றியை பறை சாற்றியது. அவர் வெற்றி கொண்ட நிறைய நாடுகளில் மக்கள் கூண்டோடு அழிக்கப் பட்டன. நகரங்கள் அடியோடு அழிக்கப் பட்டன. 

தைமுர் (Timur) ஆட்சி காலத்தில் ஆசியா, ஆப்ரிக்கா, ஐரோப்பா ஆகிய அனைத்தும் அவரைக் கண்டு மிகவும் அஞ்சின. அவருடைய படை சென்ற இடங்கள் அழிவு கண்டது. 170 லட்சம் மக்கள் கொல்லப் பட்டனர். இது அன்றைய மக்கள் தொகையில் 5% ஆகும். தைமுர் ராணுவ மேதை என்றும் போர் திட்டங்களை தீட்டுவதில் வல்லவர் என்று சரித்திரம் சொல்கிறது. தைமூரின் ஆதரவு பெற்ற டோக்டமிஷ் மாஸ்கோ முழுவதும் எரித்தார்.

தைமுர் ஹீரட் நகரை வென்று அதை தரை மட்டமாக்கி, அங்குள்ள பெரும்பாலான மக்களை படுகொலை செய்தார். இந்திய மற்றும் பாக்கிஸ்தான் மீது படை எடுத்து பலரை படுகொலை செய்தார். தனது போர் தந்திரங்களினால் டில்லி சுல்தானை வென்று டெல்லியில் இருந்த மக்கள் அனைவரையும் கொன்றார்
 
இரு நூற்றைம்பது வருட மங்கோல் யுத்தங்களினால் கொல்லப்பட்ட மக்கள் தொகை கிட்டத்தட்ட மூன்றில் இருந்து ஆறு கோடி. மஞ்சூரியன் பேரரசின் விரிவாக்கத்தால் கொல்லப்பட்ட மக்கள் தொகை கிட்டத்தட்ட இரண்டில் இருந்து மூன்று கோடி.



இது சரித்திரத்தில் இடம் பெற்ற ஒரு சில உதாரணங்கள். இதை விட பெருவாரியான கொலை, பேரழிவு, கொடுமையான போர்கள் எத்தனை, எத்தனை?. எரிக்கப் பட்ட நகரங்கள் எத்தனை?. தரைமட்டமாக்கப்பட்ட ஊர்கள் எத்தனை?. 

சுமார் 5000 வருடங்கள் சரித்திரத்தை திரும்பி பார்க்கையில் எந்த தேசத்தின் எல்லை இது வரை மாறாமல் இருந்திருக்கிறது? எத்தனை அரச வம்சங்கள் அழிந்து போயின? எத்தனை அரசுகள் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கின்றன. ஒரே குடையின் கீழ் அனைத்து நாடுகளையும் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன? 



நாடுகள் பிரிய பிரிய சேர்க்கப் படுகிறது. சேர்க்க சேர்க்க பிரிக்கப் படுகிறது. சரித்திரம் முழுக்க இதுதானே காணப் படுகிறது.