Pages

Saturday 10 May 2014

நரகம் - ஓரு புதிர்.

பாவம் செய்தவர்களுக்கு தண்டனை அளிப்பதற்காக நரகம் என்ற ஒரு அமைப்பு இருப்பதாக இந்து மதம் முதல் புத்த, ஜைன மற்றும் பல்வேறு மதங்களில் சொல்லப்பட்டு இருக்கிறது. இந்து மத புராணமான கருட புராணத்தில் இந்த நரகங்களை பற்றி விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. மிக முக்கியமாக “தாமிசிர நரகம்” முதல் “சூசிமுகம்” வரை 28 நரகங்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. புத்த மார்க்கத்தில், அபிதர்ம கோசாவில் எட்டு குளிர் நரகங்களும், எட்டு சுடு நரகங்களும் சொல்லப் பட்டு இருக்கிறது. ஜைன மார்க்கத்தில் நரகம் ஏழு இடங்களில் இருப்பதாக சொல்லப் பட்டு இருக்கிறது. பாபிலோன், எகிப்து, கிரேக்கம், எஸ்டோனியன், மாயன், பார்சியன், ரோமன், சுமேரியன், கிருஸ்து, இஸ்லாம் உள்பட சுமார் 42 பிரிவுகளில் உள்ள புராணங்களில் (Mythology) நரகம், பாதாள உலகம் (Underworld or Hell) என்ற பெயரில் விரிவாக சொல்லப்பட்டு இருக்கிறது. 


இந்த நரகங்களில் எண்ணை சட்டியில் இட்டு வறுப்பது முதல் கொடிய சித்ரவதை வரை வித விதமான குற்றங்களுக்கு வித விதமான தண்டனைகள் ஒவ்வொரு நரகத்திலும் சொல்லப்பட்டு உள்ளது.

உயிரியல் கோட்பாடுகளின்படி உடல் அமைந்து நன்கு வளர்ச்சி அடைந்த நரம்பு மண்டலம் இருந்தால் மட்டுமே வலி என்ற ஒன்றை நாம் உணர முடியும். இந்த வலியை உணர்வதற்கு மிக வளர்ச்சியடைந்த மூளை தேவைப்படுகிறது. எனவே மனிதன் இறந்ததும் அவனது உடலை அழித்தப்பின், உடலுக்கான தண்டனைகளை, அவனது உயிர் அல்லது ஆன்மா என்று சொல்லப்படும் ஒன்றுக்கு எப்படி கொடுக்க முடியும்?. வலி என்ற ஒரு உணர்வு எற்பட உடம்பு இல்லாத நிலையில் ஆன்மாவிற்கு எப்படி வலி இருக்க முடியும்?. 

மேற்கூறிய நரகங்களில் சொல்லப்பட்ட அத்தனை தண்டனைகளும் உடலுக்கானது. உயிர் அல்லது ஆன்மாவிற்கான தண்டனைகளை எது என்று சரியாக சொல்லப்படவில்லை. உடலில்லாத உயிர் அல்லது ஆன்மாவை எப்படி தண்டிப்பது?.

இந்த நரகங்கள் சொல்லப்பட்ட விதமும் தண்டனைகளும் விவரங்களும் சிறைச்சாலையோடு ஒப்பிட முடிகிறது. ஒருவன் செய்யும் தவறுகளுக்கு அவன் வாழும் போதே அவன் தவறுகளுக்கு ஏற்ப தண்டனைகள் நரகங்களில் கொடுக்கப்பட்டு இருந்தால் அதனுடைய பொருள் நமக்கு விளங்குகிறது. ஆனால் இதே தண்டனைகள் ஆன்மாவிற்கு சொல்லப்படுவது பொருத்தமாக இல்லை.

அதே சமயம், இந்த நரகங்களில் வாயிலாக மிக உன்னதமான தத்துவம் சொல்லபட்டு இருக்கிறது.

வாழ்நாள் முழுவதும் மனிதர்கள் செய்யும் நல்லவை மற்றும் தீயவை அனைத்தும் பதிவு செய்யப்படும் என்ற  concept ஒரு சிறந்த Evaluation System. இதற்கு சிறந்த Data Recording and Management System வேண்டும். ஒன்று விடாமல் பதிவு செய்ய Continuous Recording System தேவைப் படுகிறது. இவற்றை செய்ய மிக நவீன, மிக மிக பெரிய கட்டமைப்பு தேவை. விரிவான Planning and Execution வேண்டும். Accurate Recording and Verification தேவை. தவறு நடக்கவே கூடாது (Zero Error). சீர் தூக்கி பார்க்க Data compilation and Analysis செய்யப் பட வேண்டும். பதிவு செய்தது அழிந்து போகாமல் இருக்க பாதுகாப்பு – Data Security and Archives தேவை. சிந்தித்து பார்க்கையில் எவ்வளவு பெரிய Data Management System வேண்டும். தான் செய்யும் அனைத்திற்கும் தாமே பொறுப்பு என்னும் Individual Accountability  நிலை நாட்டப்படும். கொள்கை ரீதியில் எவ்வளவு பெரிய சிந்தனை?. எவ்வளவு பெரிய Global Management Concept?.

மனிதன் செய்யும் தவறுகளை அவற்றின் விளைவுகளுக்கு ஏற்ப தண்டனைகள் கூறி இருப்பது மனிதன் தவறுகளை செய்யாதிருக்க சொல்லப்பட்ட பெரிய தத்துவம். எச்சரிக்கை மணி. தீயது செய்தால் நரகமும் நல்லது செய்தால் சொர்கமும் அடையப்படும் என்ற நீதி மனிதகுலத்திற்கு ஒரு சிறந்த வழிகாட்டி. மேலும் ஒரே மனிதன் செய்த தவறுகளுக்காக சில காலம் நரகத்திற்கு சென்று மீண்டும் அவன் செய்த நன்மைகளுக்காக சொர்க்கத்தை சென்றடைவதாக சொல்லப்பட்டு இருக்கிறது. அவரவர்கள் செய்யும் நன்மை தீமைக்கு ஏற்ப நரகமும் சொர்க்கமும் மாறி மாறி கொடுக்கப்படுகிறது. இதில் சில உயரிய தத்துவங்கள் உள்ளன. தீமை செய்தால் தண்டனை கிடைக்கும், தீமைக்கேற்ப தண்டனை கொடுக்கப்படும், அது போலவே நன்மை செய்தால் உயரிய சந்தோஷம் கிடைக்கும்.

தீமை செய்தால் நரகம் கிடைக்கும் என்று மட்டும் சொல்லப்பட்டு இருந்தால் மக்கள் தீமை செய்யாமல் இருக்க முயற்சி செய்வார்கள். அதே நேரம் அவர்கள் எந்த நன்மையும் செய்ய வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது. ஏனெனில் நன்மை செய்தாலும் செய்யாவிட்டாலும் கிடைப்பது ஒன்றும் இல்லை என்னும் போது யாரும் நன்மை செய்ய முன்வரப்போவதில்லை.

எனவே, தீமை செய்தால் நரகமும், நன்மை செய்தால் சொர்க்கமும் கிடைக்கும் என்ற தத்துவத்தினால் மக்கள் தவறுகளையும் குறைத்துக்கொண்டு நன்மைகளை செய்ய வழிவகுக்கும். ஒரு மனிதன் செய்யும் நன்மையும் தீமையும் சமூகத்தை கடுமையாக பாதிக்கிறது. ஒரு நல்ல சமூகம் அமைய அதனுடைய மக்கள் தீமைகளை குறைத்துக்கொள்ளவும் அதே நேரத்தில் நன்மைகள் பல புரியவும் இந்த நரக தத்துவம் பெரிதும் உதவுகிறது.

தாங்கள் செய்யும் தவறுகளுக்கு பிராயசித்தமாக சில நன்மைகள் செய்தால் அதிலிருந்து பாவங்கள் கழிக்கப்படும் என்ற எண்ணம் இன்றைய சமூகத்தில் மிக ஆழமாக பதிந்திருக்கிறது. எனவே தான் எத்தனை தவறு செய்தாலும் அதற்கேற்ப தான, தர்ம, பூஜைகளை செய்வதால் தாங்கள் செய்யும் தவறுகளில் இருந்து தப்பிக்கலாம் என்ற இன்றைய கால நம்பிக்கையை நரக தத்துவம் உடைத்து எறிகிறது. தீமைக்கு  தண்டனையும், நன்மைக்கு சந்தோஷமும் கிடைக்கும் என்ற நம்பிக்கை ஒரு சமூகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்து இருக்கும். 

தவறுகளுக்கு தண்டனை அளிக்கும் அதே நேரத்தில் செய்யும் நன்மைகளுக்கு பரிசு கொடுக்கும் தத்துவம் இன்றைய உயர் நிலை நிர்வாக கோட்பாடாக (High level Management concept) கடைபிடிக்கப்பட்டு வருகிறது.