Pages

Sunday 15 December 2013

கடவுள், மொழி, மதம்.


பொதுவாக மொழிக்கும் கடவுளுக்கும் நிறைய சம்பந்தம் இருக்கிறது. கடவுளை அறிந்ததாக சொன்னவர்கள் ஒரு சிலரே, ஆனால் மற்ற அனைவரும் இவர்களை நம்பியும், இவர்களது அறிவுரைகளை கேட்டும், இவர்களை பின் தொடர்ந்துமே கடவுளை வணங்கி வருகின்றனர். கடவுளை அறிந்ததாக சொல்ல படும் சிலர் உலகில் உள்ள மற்ற அனைவருக்கும் எடுத்து கூற மொழி தேவை படுகிறது. 

மொழி இல்லாமல் போய் இருந்தால் எதையும், யாரும், யாருக்கும் புரிய வைத்து இருக்க முடியாது. கடவுளை பற்றிய ஞானம் மக்களுக்கு தெரிய படுத்த, அதை கேட்டு அனைவரும் பின் பற்ற மொழி ஒரு முக்கியமான, மறுக்க முடியாத ஒரு தேவை. அவனன்றி ஒரு அணுவும் அசையாது என்பது மொழி இன்றி அனைவருக்கும் தெரிந்திராது.   

மொழி உருவான பின்பே கடவுளை பற்றி ஞானம் பரவி இருக்க முடியும். வேறு சைகையினாலோ அல்லது ஓவியம் வரைந்தோ கடவுளை பற்றிய செய்திகளை யாராலும் முழுமையாக பரப்பி இருக்க முடியாது. மொழி இல்லாமல் இருந்த காலத்தில் ஒரு சிலர் கடவுளை அறிந்து இருந்தாலும் அதை மற்றவர்களிடத்தில் சொல்லி இருக்க முடியாது.

கடவுளை பற்றிய ஞானம், மொழி உருவானதற்க்கு முன்னரும் மொழி உருவானதற்க்கு பின்னரும் நிச்சயமாக ஒன்றாக இருக்க முடியாது. ஆனால் முதல் முதலாக கடவுளை பற்றிய தகவல்களை பரிமாற ஏதேனும் ஒரு மொழி அவசியம் தேவை. அதன்பின் அந்தந்த மொழிகளில் இருக்கும் கடவுளை பற்றிய தகவல்கள் மற்றோரு மொழிகளில் இருந்து பெறப்பட்டு இருக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் மொழி இல்லாத காலத்தில் இருந்து மொழி உருவான காலத்திற்க்கு தகவல்களை பரிமாறிக் கொள்ள வாய்ப்புகள் இல்லை.

கடவுளை பற்றிய தகவல்கள் மற்றும் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை மக்களுக்கு அறிவித்து அவர்களை பின்பற்ற வைக்க மதம் என்னும் ஒரு அமைப்பு தேவை படுகிறது. ஆனால் மதம் தோன்ற, மக்கள் அதை பின்பற்ற மொழி நிச்சயம் தேவை. மொழி இல்லாமல் மதம் இல்லை. எனவே மதம் அனைத்தும் அந்தந்த மொழி உருவான பின்னரே தோன்றி இருக்க முடியும். மதம் உருவாகி பின் அதை மக்கள் பின் பற்ற ஏதேனும் ஒரு மொழி நிச்சயம் அவசியம். 
 


ஒரு மதம் தோன்றிய காலம் அறிய அது உருவான மொழியின் காலம் அறியப்பட வேண்டும். அதன் பின்னரே மதம் தோன்றிய காலத்தை கணக்கிட முடியும். ஒரு மதம் தோன்றிய மொழியில் இருந்து மற்ற மொழிக்கு பரவி அது பின்பற்றப்பட்டு இருக்கிறது. ஒரு மொழியில் ஒரு மதம் தோன்றி அது மற்ற மொழிக்கு பரவாமல் இருக்கும் போது, அந்த மொழி அழியும் போது அந்த மதமும் அழிந்து, அந்த மதத்தில் பின் பற்றப் பட்ட கடவுள்கள் பற்றிய தகவல்களும் மறைந்து விடுகிறது..

புத்தருடைய மொழி மஹதி ப்ராக்ரித். ஆனால் அவருடைய கருத்துக்கள், போதனைகளாகி, புத்த மதம் உருவாகி, பின்னர் பல்வேறு மொழிகளை சேர்ந்தவர்களால் இன்றும் பின்பற்றப் படுகிறது. ஆனால் புத்த மதம் தோன்றிய மஹதி ப்ராக்ரித் மொழி இன்று இல்லை. புத்த மதம் வேறு மொழிகளுக்கு பரவாமல் இருந்திருந்தால் இன்று புத்தருடைய போதனைகள் நம்மிடையே இல்லாமல் போயிருக்கலாம்.

மேற்கு அந்தமானில், 65,000 ஆண்டுகள் பழைமையான  கிரேட் அந்தமானீஸ் மொழி குடும்பத்தை (Great Andamanese language family) சேர்ந்த கடைசி பெண்மணி, போவா சீனியர் (Boa Sr) கடந்த ஜனவரி 2, 2010 –ல் இறந்தார். அவருடன் அந்த இனத்தை சேர்ந்த போ (Aka-Bo) மொழியும், அதில் பின் பற்றப்பட்ட மதமும் மறைந்து போனது. இது போலவே மனித குலம் தோன்றிய காலம் முதல் ஏராளமான மொழிகளும் அதில் தோன்றிய மதங்களும் மறைந்து போன சரித்திரம் நிறைய உண்டு.


Sunday 8 December 2013

ஆண்டவரா, கடவுளா ?


நம்மையும் இந்த உலகத்தையும் படைத்தவர் கடவுள் மற்றும் ஆண்டவர் என்று நம்பப்படுகிறது. ஆனால் படைத்தவருக்காக கூறப்படும் இலக்கணங்கள் படி கடவுள் என்பது வேறு, ஆண்டவர் என்பது வேறு. ஆண்டவர் என்று நாம் வழிபடுவது என்றொ, எங்கொ, எப்பொழுதோ நம்மை ஆட்சி செய்தவர்கள். நம்மை ஆள்பவர்களை கடவுள்களுக்கு சமமாகவோ அல்லது அடுத்ததாகவோ வைத்து வணங்கி வழிபடும் வழக்கம் முற்காலத்தில் இருந்து வந்தது. அந்த காலத்தில் ஆட்சி செய்தவர்களில் சிறப்பாக ஆட்சி செய்தவர்களையும், தமது மக்களை வெகு சிறப்பாக வழி நடத்தி வந்தவர்களையும் மக்கள் வணங்கி வரும் பழக்கம் இருந்த்து. இவர்களையே ஆண்டவர்களாக மக்கள் வழி படுகின்றனர். 

அனைத்தையும் படைத்தாக கூறப்படும் கடவுள்களுக்கும் இந்த ஆண்டவர்களுக்கும் சம்மந்தம் இல்லை. மக்கள் ஆண்டவர்களை வணங்கியது நன்றிக்காக, கடவுளை  வணங்கியது காப்பதற்காக. மக்கள் தாம் வணங்கியவர்களை நாளடைவில் வழி பட தொடங்கினர். இந்த பழக்கதினாலேயே கடவுள் எது, ஆண்டவன் எது என்று வித்தியாசம் தெரியாமல் போய்விட்டது. இன்று கடவுள்களாக வழி படுபவர்கள் பெரும்பாலும் ஆண்டவர்களே. கடவுள்களுக்கும், ஆண்டவர்களுக்கும் உள்ள வித்யாசங்கள் சரி வர நிர்ணயிக்க படாததால் அனைவரையும் மக்கள் வழி பட தொடங்கினர். 

அந்நாளில் ஆட்சி செய்த தலைவர்கள் மற்றும் மன்னர்கள் ஆகிய ஆண்டவர்களை பற்றிய காலம் நேரம், தேசம் ஆகிய விவரங்கள் சரித்திரத்தில் இடம் பெறாததால் அவர்களை பற்றிய முழு விவரங்களை நம்மால் இன்றைக்கு அறிந்து கொள்ள முடியாமல் போனது. இவர்களில் சிறந்தவர்களை மக்கள் காலம் காலமாக, தலைமுறை தலைமுறையாக வணங்கி, பின்னர் வழி பட்டதால் இன்றும் ஆண்டவர்களாக மக்கள் வணங்கி வருகின்றனர்.

காட்டு வாசிகளாக இருந்தது முதல் நவ நாகரீகமான இந்த காலம் வரை நடை பெற்ற மாற்றங்களில், உடையில் ஏற்பட்ட மாற்றங்களும் மிக முக்கியமானது ஒன்று. உடைகளை வைத்து அவர் எந்த கால கட்டத்தை சேர்ந்தவராக இருக்க முடியும் என்று கூறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இதை போலவே ஆடை, அணிகலங்களை வைத்து அவர்கள் எந்த பகுதியை அல்லது கலாச்சாரத்தை சேர்ந்தவர்கள் என்று அறிந்து கொள்ளலாம். பெரும்பாலும் காட்டு வாசிகளாக இன்றைக்கும் வாழ்ந்து வருபவர்களிடையே பெரியதொரு மாற்றம் இல்லை. ஆனால் நாகரீகம் வளர, வளர ஆடை, ஆபரணங்களில் மாற்றம் பெரிதளவில் நிகழ்ந்து கொண்டே வருகிறது. 

நம்மை ஆண்ட ஆண்டவர்களின் உருவங்களை சிலையாக செதுக்கியோ, ஓவியமாக வரைந்தோ இருந்திருந்தால் அவர்களின் ஆடை, அணிகலன் மற்றும் ஆயுதங்கள் வைத்து அவர்கள் எந்த கால கட்டத்தை சேர்ந்தவர்கள் என்று நம்மால் யூகிக்க முடியும். ஆனால், இவர்களை பற்றிய தோற்றங்களை பிற்காலத்தில் உருவாக்கப்பட்டிருந்தால் இது பற்றிய கால கணிப்பை செய்ய முடியாது. எனவே சரித்திர சான்றுகள் சரியாக இருக்கும் போது இந்த ஆண்டவர்களை பற்றிய காலமும் எந்த பகுதியை சேர்ந்தவர்கள் என்ற விவரமும் நம்மால் கணிக்க முடியும்.        

Model Photos


Sunday 1 December 2013

சித்தரும் லிங்கமும் - ஒரு சிந்தனை - 2


திருவண்ணாமலை பற்றிய புவியியல் பதிவெடுகளை புரட்டி பார்க்கும் பொழுது மிக ஆச்சரியமான தகவல்கள் அறிய முடிந்தது. திருவண்ணாமலை பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் ஒரு எரிமலை (volcano) யாக இருந்து இன்று ஒரு குளிர்ந்த எரிமலை (extinct volcano) யாக கருதப் படுகிறது. அதில் இருந்து வெளிப்பட்ட நெருப்பு குழம்பு பல சதுர மைல்கள் பரவி இருந்தது. பத்தாயிரம் ஆண்டுகள் எரிமலையில் இருந்து நெருப்பு குழம்புகள் வராமல் இருந்தால் இன்றைய ஆராய்ச்சி விதிகளின் படி extinct volcano என்று கருத படுகிறது. 

எரிமலை வெடித்து திருவண்ணாமலை உருவான விதம் அமெரிக்காவில் உள்ள நார்த் கலிபோர்னியாவில் உள்ள சியர்ரா நிவேதா (Sierra Nevada) மலை தொடரில் உள்ள மவுன்ட் ஷஸ்தா (Mt. Shasta) வோடு ஆராய்ச்சியாளர்களால் ஒப்பிடப் படுகிறது, திருவண்ணாமலை மிகப் பழமையான எரிமலைகளில் ஒன்றாக இருந்து பின்னர் குளிர்ந்து விட்டது. 
திருவண்ணாமலை

 மவுன்ட் ஷஸ்தா (Mt. Shasta)
 
திருவண்ணாமலை ஒரு குளிர்ந்த எரிமலை, அக்னி ஸ்தலம் என்பதை மக்களுக்கு நினைவூட்ட மலையின் மேல் ஒரு குறிப்பிட்ட நாளில் தீபம் ஏற்றும் பழக்கம் இருந்திருக்க வாய்ப்புண்டு.  இது மக்களை எச்சரிக்கை படுத்தவும், திருவண்ணாமலை ஒரு ஆதி எரிமலை, மீண்டும் எரிமலை வெடித்து சிதறலாம் என்று மக்களுக்கு காலம்காலமாக நினைவூட்டவும் இந்த பழக்கம் இருந்திருக்க கூடும். இதுவே அண்ணாமலை தீபம்.

எரிமலையில் இருந்து அக்னி வெளியேறி இயற்கையான அக்னிஸ்தம்பமாக (நெருப்பு தூண்) தோன்றும் காட்சி.
 அண்ணாமலை தீபம் ஏற்றும் காட்சி


இந்த நெருப்பு குழம்புகள் குளிர்ந்து மணற்பரப்போடு பாறைகளாக உருமாறியது. இவை மிக கெட்டியான பாறையாக இருபதால் இந்த பகுதிகளில் தாவரங்கள் பெருமளவு வளர முடியவில்லை. லட்சக் கணக்கான வருடங்கள் கழிந்துபின் இந்த இடங்கள் தாவரங்கள் வளர கூடிய இடமாக மாற்றியது. எரிமலையில் இருந்து புதிதாக வந்த நெருப்பு குழம்பு குளிர்ந்து பாறையான இடங்களில் தாவரங்கள் பெரிதாக வளருவதில்லை. இங்கு தாவரங்கள் வளர பல ஆயிரம் அல்லது லட்சம் வருடங்கள் ஆகிறது.

இங்கு வளர்ந்த தாவரங்கள் மண்ணில் உள்ள உலோகங்களையும், தாதுக்களையும் எடுத்து மருத்துவ குணம் உள்ள மூலிகையாக இரண்டு கட்டங்களாக மாற்றுகிறது. முதல் கட்டமாக உலோகங்களையும், தாதுக்களையும் உறிஞ்சி எடுத்து, அதை நச்சு தன்மை தன்னை பாதிக்காத வகையில் பிரித்து பலவேறு பாகங்களில் சேமித்து வைக்கிறது (Phytoremediation). தாவரங்கள் நச்சு தன்மை உடைய உலோகங்களையும், தாதுக்களையும் தனக்குள் சேமிக்கும் திறணை உலகம் முழுவதும் இன்றும் பல்வேறு நவீன விஞ்ஞான முறைகளை பயன் படுத்தி பெரிய அளவில் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.

இரண்டாவது கட்டமாக பல்வேறு வகையில் சேமிக்கப் பட்ட உலோகங்களையும், தாதுக்களையும் தனக்குள்ளே கொண்டு மருத்துவ குணம் உள்ள மூலிகைகளாக மாறும் விந்தை தாவரங்களின் உள்ளே நடை பெருகிறது. இந்த விந்தையை இன்றும் நம்மால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் சித்தர்கள் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு இந்த தாவரங்களை மூலிகைகளை மருந்தாக பயன் படுத்தினர்.  

இது போன்ற பகுதிகளில் உள்ள பல்லாயிரக் கணக்கான தாவரங்களில் சில நூற்றுக்கணக்கான தாவரங்களையே சித்தர்கள் மூலிகைகளாக  உறுதி படுத்தினர். இந்த பகுதியில வளரும் அனைத்து தாவரங்களும் மருத்துவ குணம் உள்ளவையா என்று ஒரு முழு அளவில் ஆராய்ச்சி நடத்தப்படாமல் போயிருக்கலாம். 

சித்தர்கள் எதன் அடிப்படையில் ஒரு சில நூற்றுக்கணக்கான தாவரங்களை மட்டும் அடையாளம் கண்டு அதில் உள்ள மருத்துவ குணத்தை ஆராய்ச்சி செய்து உறுதி படுத்தி மருந்துகளாக பயன் படுத்தினர் என்ற ரகசியம் இன்று வரை நம்மால் முழுமையாக அறிந்து கொள்ள முடியவில்லை.

நாடு எங்கும் லட்சக் கணக்கான தாவரங்கள் இருக்கும் போது மருந்துவ குணம் உள்ள தாவரங்களை தெரிந்து எடுக்க முதற் கட்டமாக, எரிமலையாக இருந்து, நெருப்பு குழம்பு வெளியே வந்து பின்னர் குளிர்ந்து அந்த இடங்களில் வளரும் தாவரங்களை ஆராய்ச்சி செய்தனர். 

நெருப்பு குழம்பு வெளி வந்து பரவும் போது அதில் உள்ள உலோகங்களும், தாதுக்களும் அதிக அளவில் அங்கேயே, அருகிலேயே சில தூரம் வரை இருக்கும். நெருப்பு குழம்பு வெகு தூரம் பரவ, பரவ அதில் உள்ள உலோகங்களும், தாதுக்களும் அளவில் குறைந்து கொண்டே போக வாய்ப்பு இருக்கிறது. எனவே தான் சித்தர்கள் நெருப்பு குழம்பு வெளியான இடங்களை சுற்றிய பகுதிகளில் தங்கள் மூலிகை ஆராய்ச்சியை தொடர்ந்தனர்.